புதன், 1 ஏப்ரல், 2009

முதலில் எழுதிய கவிதை

என்னுள் ஒரு கவிஞன் இருக்கிறான் என நான் அறிந்தது கல்லூரி படிக்கும்போது தான் ,
நட்சத்திரம் வானின் பொற்சித்திரம் என்று அன்று நான் எழுதியது இன்னும் என் நண்பனுக்கு நினைவிருக்கும் :)
சும்மா நாலு வார்த்தைகளை எதுக மோனையா போட்டால் கவிதை வந்துவிட போகுதுன்னு தான் முதல்ல ஆரம்பிச்சேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது ஒரு நாலு பேர்த்த impress பண்ண உபயோக படுத்திக்கலாமேன்னு .
ஆனா ஒரு பொண்ணோட பிறந்த நாளுக்கு எழுதின மொக்க கவிதைய அந்த பொண்ணு எத்தனை பிறந்த நாள் கொண்டாடினாலும் மறக்க மாட்டாள் ..


என் கல்லூரி வகுப்பிலேயே மிகவும் இளகிய , உதவும் எண்ணம் கொண்டவள் அவள் . என்னதான் அதிக பழக்கம் இல்லையென்றாலும் அவளுக்கு ஒரு வாழ்த்து அட்டை கொடுத்து அவள் பிறந்தநாளில் அசத்த வேண்டும் என்று முடிவு செய்தோம் , சும்மா எப்படி கொடுப்பது என்று நான் எழுதிய கவிதை .. கொஞ்சம் மொக்கையாதான் இருக்கும், இருந்தாலும் என் நண்பர்கள் இரசிப்பதற்காக ,

மழை தரும் தருவே..

தரு தரும் நிழலே ....

நிழலில் வாழும் உன் நண்பர்களின்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .


மழலையின் மடியினில்

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் -என்று அணுவைத் துழைதேழ் கடலை புகுத்தும் திருக்குறளை எழுதிய வள்ளுவர் சொல்வார், அது போல என்னதான் இரகுமான் ,ஆரிசு செயராசு இசை கேட்டாலும் மழலையின் புரியாத மொழியின் இன்பமே தனி.இன்றொரு மழலையினை ஓடும் பேருந்தின் ஓரமாய் பார்த்தேன்-பார்த்ததும் அதிர்ந்து கொண்டிருந்த பாட்டை கேட்க மறுத்தன என் காதுகள் ..
ஏன் தெரியுமா,
உன்னைப்போலவே எந்த எதிர்பார்ப்பும் இன்றி நான் வாழ்ந்திருக்க கூடாதா என்று எனக்கு கேட்க தோன்றியதால் ..
உலகில் மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று ..யாரோ சொன்னது நினைவுக்கு வரவே மீண்டும் மூழ்கினேன் मोला வுக்குள் .. (தில்லி 6 )....
சக ஊழியர்களோடும் ,நான் எப்போதும் பார்க்கும் அந்த மழலை முகப் பெண்ணோடும் சேர்ந்தேன் அலுவலகத்திற்கு!!!

விழுந்து விட்டேன் நானும் கடைசியில்

எனதருமை நண்பர்களே,

முதலில் நான் முத்துவிற்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும் (தேடல் தொடங்கியதே நாயகன் ).இவன் திரைக்கு வர இன்னும் சில மாதமே ஆகப்போகும் புது படத்தின் நாயகனா என்று நீங்கள் கேட்டால் அது தவறு. முத்து என் அலுவலக நண்பன்(தேடல் தொடங்கியதே என்னும் கதை எழுதுகிறான். அதிக விவரங்களுக்கு (இது அவன் வலை பக்கம்-muthumalla.blogspot.com).
வெகு நாட்களாக என் தாய் மொழிப்பற்றினை பறை சாற்ற வேண்டும் என்றெண்ணிய எனக்கு இவ்வலைப்பக்கம் நல்லதோர் ஊடகமாய் இருக்கும் என நம்புகிறேன் :)
இறுதியில் நானும் சற்று என் படைப்புக்களை தருகிறேன் :) .